பதற்றமான வாக்குச்சாவடி மையத்தை கலெக்டர் ரத்னா ஆய்வு


பதற்றமான வாக்குச்சாவடி மையத்தை கலெக்டர் ரத்னா ஆய்வு
x
தினத்தந்தி 27 Dec 2019 10:30 PM GMT (Updated: 27 Dec 2019 2:42 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடி மையத்தை கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார்.

அரியலூர், 

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், திருமானூர் மற்றும் செந்துறை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டமாக நேற்று 522 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் ஜெயங்கொண்டம், தா.பழூர் மற்றும் ஆண்டிமடம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு வருகிற 30-ந் தேதி 495 வாக்குச்சாவடிகளில் 2-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

நேற்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற செந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையத்தினையும், அரியலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களையும் மாவட்ட கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார். மேலும் திருமானூர், செந்துறை ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையமான கீழப்பழூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் கலெக்டர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அதிகாரி (பொறுப்பு) பாலாஜி, வட்டாட்சியர் தேன்மொழி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், போலீசார் பலர் உடனிருந்தனர்.

Next Story