தஞ்சையில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட முயற்சி இந்து மக்கள் கட்சியினர் 14 பேர் கைது


தஞ்சையில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட முயற்சி இந்து மக்கள் கட்சியினர் 14 பேர் கைது
x
தினத்தந்தி 12 Jan 2020 11:00 PM GMT (Updated: 12 Jan 2020 8:21 PM GMT)

தஞ்சையில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட முயற்சி செய்த இந்து மக்கள் கட்சியினர் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்,

விவேகானந்தரின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அவருடைய பிறந்த நாள் அன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் விடுமுறை அறிவிக்கப்பட வில்லை.

இந்த நிலையில் விடுமுறை அறிவிக்காததால் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்போவதாக தஞ்சை மாவட்ட இந்து மக்கள் கட்சியினர் அறிவித்து இருந்தனர். அதன்படி மாவட்ட பொதுச்செயலாளர் சுகுமார் தலைமையில் தலைவர் பிரபு முன்னிலையில் நிர்வாகிகள் சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடுவதற்காக தஞ்சை பூக்காரத்தெருவில் உள்ள முருகன்கோவில் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.

14 பேர் கைது

ஊர்வலம் சாந்தப்பிள்ளைகேட் டாஸ்மாக் கடை அருகே வந்தது.

அப்போது அங்கு குவிக்கப்பட்டு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் இந்து மக்கள் கட்சி நகர செயலாளர் சதீஷ்குமார், நகர நிர்வாகிகள் தாமோதரன், சிவனேசன் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story