அட்மா திட்ட செயல்பாடுகளை வேளாண்மை அதிகாரி ஆய்வு


அட்மா திட்ட செயல்பாடுகளை வேளாண்மை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 17 Jan 2020 10:00 PM GMT (Updated: 17 Jan 2020 5:35 PM GMT)

அட்மா திட்ட செயல் பாடுகளை வேளாண்மை துணை இயக்குனர் பாலசுப்ரமணியன் ஆய்வு செய்தார்.

அரியலூர், 

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் பாலசுப்ரமணியன் செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், அரியலூர் ஆகிய வட்டாரங்களில் நடைபெறும் அட்மா திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை, செயல் விளக்கதிடல் மண்புழு உர உற்பத்தி செயல் விளக்கத்திடல், சம்மங்கியில் பாலதீன் தாள் கொண்டு நிலபோர்வை அமைத்த செயல் விளக்கத்திடல், விதை விதைக்கும் நிலக்கடலை கருவி கொண்டு நிலக்கடலை விதைப்பு செயல் விளக்கத் திடல், காய்கறிகளை தரம் பிரித்து விற்பனைக்கு கொண்டுசெல்லும் பிளாஸ்டிக் பெட்டிகள், சோலார் மின் விளக்கு பொறி செயல்விளக்க திடல் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அங்கங்க பண்ணையம் செயல்விளக்க திடல் திட்டங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு உற்பத்தி முறைகள் மற்றும் நவீனயுத்தி முறைகள் பற்றியும் லாபம் ஈட்டும் முறைகள் பற்றியும் எடுத்துக்கூறினார். ஆய்வின் போது வேளாண்மை துணை இயக்குனர் பழனிசாமி மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர்கள், வேளாண்மை அலுவலர்கள், வட்டார தொழில் நுட்ப மேலாளர்கள், உதவி தொழில்நுட்ப மேலளார்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story