கலவை அருகே, அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் கல்வீச்சு - அண்ணன்- தம்பி கைது


கலவை அருகே, அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் கல்வீச்சு - அண்ணன்- தம்பி கைது
x
தினத்தந்தி 17 Jan 2020 10:15 PM GMT (Updated: 17 Jan 2020 9:51 PM GMT)

கலவை அருகே, அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் கல்வீசிய அண்ணன்- தம்யை போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம், கலவையை அடுத்த மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அரிதாஸ் (வயது 50), அ.தி.மு.க. பிரமுகர். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த அவரது அண்ணனின் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி இரவு அரிதாசின் அண்ணன் மகன்கள் அரவிந்த்சாமி (27), அரிகிரு‌‌ஷ்ணன் (23) ஆகியோர், அரிதாசின் வீட்டின் வெளியே நின்று கொண்டு சொத்து தொடர்பாக கேட்டு, அரிதாசை வெளியே வருமாறு கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அரிதாஸ் வெளியே வராததால் ஆத்திரமடைந்த, இருவரும் கற்களை எடுத்து வீட்டின் மேல் வீசியுள்ளனர். இதில் வீட்டின் முன்புற கதவு, ஜன்னல் கண்ணாடிகள் ஆகியவை உள்பட பொருட்கள் சேதமடைந்தன.

இதுதொடர்பாக அரிதாஸ் வாழைப்பந்தல் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி வழக்குப்பதிவு செய்து அரவிந்த்சாமி, அரிகிரு‌‌ஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர்.

Next Story