ஆர்.கே.பேட்டை அருகே, இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


ஆர்.கே.பேட்டை அருகே, இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 20 Jan 2020 10:30 PM GMT (Updated: 20 Jan 2020 8:28 PM GMT)

ஆர்.கே.பேட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளிப்பட்டு, 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே. பேட்டை அருகே கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சர்தார் (வயது 34). எலக்ட்ரீசியன். இவரது மனைவி மஹிமா (28). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். நேற்றுமுன்தினம் மஹிமா தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதுகுறித்து ஆர்.கே. பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மஹிமா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கணவன் மனைவிக்கு இடையே ஏதாவது தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story