அம்மா திட்ட முகாம் நாளை நடைபெறும் இடங்கள்


அம்மா திட்ட முகாம் நாளை நடைபெறும் இடங்கள்
x
தினத்தந்தி 12 Feb 2020 9:30 PM GMT (Updated: 12 Feb 2020 2:35 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:–

அம்மா திட்ட முகாம் 


தமிழக அரசு சார்பில் அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்குவதற்காக வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் அம்மா திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வாரத்துக்கான முகாம் நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இந்த முகாம் தூத்துக்குடி தாலுகா அய்யனடைப்பு கிராமம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் தாலுகா மணப்பாடு கிராமம், சாத்தான்குளம் தாலுகா கொம்மடிக்கோட்டை, கோவில்பட்டி தாலுகா கழுகுமலை, விளாத்திகுளம் தாலுகா முத்துசாமிபுரம், எட்டயபுரம் தாலுகா அயன்வடமலாபுரம், ஓட்டப்பிடாரம் தாலுகா மலைப்பட்டி, கயத்தாறு தாலுகா கே.சிதம்பராபுரம், ஏரல் தாலுகா அங்கமங்கலம் கிராமத்தில் நடக்கிறது.

வீட்டுமனை பட்டா 


இந்த முகாமில் மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு–இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story