குடும்ப தகராறில் மனைவி எரித்து கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - கோவை கோர்ட்டு தீர்ப்பு


குடும்ப தகராறில் மனைவி எரித்து கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - கோவை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 20 Feb 2020 10:15 PM GMT (Updated: 20 Feb 2020 5:17 PM GMT)

குடும்ப தகராறில் மனைவியை எரித்து கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

கோவை,

கோவை ராமநாதபுரம், ஒலம்பஸ், நாகப்பதேவர் வீதியை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 53). தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி (48). இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது.

கடந்த 31.8.2016 அன்று தகராறு ஏற்பட்டபோது, ஆத்திரமடைந்த தண்டபாணி கேனில் இருந்த மண்எண்ணெயை லட்சுமி மீது ஊற்றி, தீ வைத்துள்ளார். இதில் லட்சுமி உடல் கருகி பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்தார். இந்த கொலை குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்டபாணியை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பூரணஜெய ஆனந்த், குற்றம்சாட்டப்பட்ட தண்டபாணிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பிரபுராம் ஆஜராகி வாதாடினார். ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தண்டபாணி கோவை சிறையில் அடைக்கப்பட்டார். 

Next Story