தர்மபுரி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம் கூலித்தொழிலாளி கைது


தர்மபுரி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம் கூலித்தொழிலாளி கைது
x
தினத்தந்தி 22 Feb 2020 10:30 PM GMT (Updated: 22 Feb 2020 6:51 PM GMT)

தர்மபுரி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளியை தர்மபுரி மகளிர் போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் 40 வயது பெண். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவரை பெற்றோர் வீட்டில் வைத்து பராமரித்து வந்தனர். அந்த பெண்ணின் குடும்பத்தினர் கூலி வேலைக்காக வெளியூர்களுக்கு சென்று வருவது வழக்கம்.

பெற்றோர் வெளியூருக்கு வேலைக்கு சென்று விட்டதால் அந்த பெண் வீட்டில் தனியாக இருந்து வந்தார். சம்பவத்தன்று சிவாடி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி நாகன் (வயது 23) என்பவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

கூலித்தொழிலாளி கைது

இதனால் அவருடைய பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக அந்த பெண்ணின் பெற்றோர் தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சர்மிளாபானு மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.இதைத்தொடர்ந்து பாலியல் பலாத்கார பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூலித்தொழிலாளி நாகனை கைது செய்தனர்.

Next Story