மணப்பாறையில் ஜூஸ் கடை உரிமையாளர் தற்கொலை


மணப்பாறையில் ஜூஸ் கடை உரிமையாளர் தற்கொலை
x
தினத்தந்தி 23 Feb 2020 10:15 PM GMT (Updated: 23 Feb 2020 9:22 PM GMT)

மணப்பாறையில் ஜூஸ் கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மணப்பாறை,

மணப்பாறை லட்சுமிபுரம் தெற்கு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45). இவர் விராலிமலையில் ஜுஸ் கடை நடத்தி வந்தார். அதில் போதிய வருமானம் கிடைக்காததால் நஷ்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 2 மாதமாக வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட மணிகண்டன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு கொண்டார். வெளியில் சென்றிருந்த மனைவி மற்றும் மகன் வந்து பார்த்த போது மணிகண்டன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர், அவரது உடலை மணப்பாறை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story