விராஜ்பேட்டை அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது


விராஜ்பேட்டை அருகே   கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை   உருக்கமான கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 24 Feb 2020 11:26 PM GMT (Updated: 24 Feb 2020 11:26 PM GMT)

விராஜ்பேட்ைட அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாா். அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கி உள்ளது.

குடகு, 

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா பெல்லகெரே கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சிதா (வயது 17). இவர் சித்தாப்புரா பகுதியில் உள்ள அரசு ஜூனியர் கல்லூரியில் பி.யூ.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிைலயில் ரஞ்சிதா தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதற்காக அவர் பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை.

இதனால் ரஞ்சிதா மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், ரஞ்சிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கிைடயே வெளியே சென்றிருந்த அவருடைய பெற்றோர் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது ரஞ்சிதா, தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ரஞ்சிதாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

உருக்கமான கடிதம்

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சித்தாப்புரா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் ரஞ்சிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திாிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, ரஞ்சிதா எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது.

அந்த கடிதத்தில், ‘என்னு ைடய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நான் பலருக்கு கஷ்டங்களை கொடுத்துவிட்டேன். இதனால் இந்த கடினமான முடிவை எடுக்கிறேன். எனது அம்மா, அப்பா, நண்பர்களை விட்டு பிரிந்து செல்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள்’ என்று உருக்கமாக கூறியிருந்தார்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து சித்தாப்புரா போலீசார் நடத்திய விசாரணையில், தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ரஞ்சிதா, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து சித்தாப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story