அம்பை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை கடன் தொல்லையால் பரிதாபம்


அம்பை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை கடன் தொல்லையால் பரிதாபம்
x
தினத்தந்தி 29 Feb 2020 9:30 PM GMT (Updated: 29 Feb 2020 12:22 PM GMT)

அம்பை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

அம்பை, 

அம்பை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இளம்பெண் 

அம்பை அருகே உள்ள ஊர்க்காடு பெருமாள் கோவில் சன்னதி தெருவை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். அவருடைய மனைவி பழனியம்மாள் என்ற வசந்தி (வயது 30). இவர் மகளிர் சுய உதவிக்குழுவில் அதிக கடன் வாங்கி இருந்தாகவும், இதனை கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த பழனியம்மாள் வீட்டில் வைத்து தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

தீக்குளித்து தற்கொலை 

பலத்த தீக்காயங்களுடன் இருந்த அவரை மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல்உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை பழனியம்மாள் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story