கொரோனா வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம்


கொரோனா வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம்
x
தினத்தந்தி 18 March 2020 10:30 PM GMT (Updated: 18 March 2020 7:36 PM GMT)

பென்னாகரத்தில் அ.தி.மு.க. சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம்.

பென்னாகரம்,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பென்னாகரத்தில் அ.தி.மு.க. சார்பில் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாநில விவசாய பிரிவு தலைவரும், தர்மபுரி மாவட்ட பால்வள தலைவருமான டி.ஆர்.அன்பழகன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பென்னாகரம் கடைவீதி, பஸ் நிலையம், வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள்,பஸ் பயணிகள் மற்றும் கடைக்காரர்களுக்கு துண்டுபிரசுரங்கள் வினிேயாகம் செய்தனர். மேலும் வெளிநாடுகளுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் செல்வதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் தங்கள் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவவேண்டும். சளி, இருமல், காய்ச்சல் தென்பட்டால் உடனே அருகில் உள்ள சுகாதார நிலையம், பொது அரசு மருத்துவமனை ஆகியவற்றை அணுக வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் சுப்பிரமணியன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ரவி, கலைவாணன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் அற்புதம் அன்பு, ஆடு வளர்ப்போர் சங்கத்தலைவர் முருகேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story