வேடசந்தூர் அருகே, மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்த கார்


வேடசந்தூர் அருகே, மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்த கார்
x
தினத்தந்தி 6 April 2020 10:00 PM GMT (Updated: 7 April 2020 4:53 AM GMT)

வேடசந்தூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மின்கம்பம் மீது மோதி கவிழ்ந்தது.

வேடசந்தூர்,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மூலச்சத்திரத்தை சேர்ந்தவர் நவீன் (வயது 21). இவர், வேடசந்தூர் ஆத்துமேட்டில் உள்ள ஒரு பேக்கரியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று இவர், வேடசந்தூரில் இருந்து தனது சொந்த ஊரான மூலச்சத்திரத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

வேடசந்தூர் அருகே சாலையூர் நால்ரோடு பகுதியில் அவர் வந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. ஒருகட்டத்தில் அந்த கார், சாலையோரம் இருந்த மின்கம்பம் மீது மோதி கவிழ்ந்தது. மேலும் கார் மோதியதில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள், சாலையூர் நால்ரோடு பகுதியில் உடனடியாக மின்சாரத்தை துண்டித்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் காரை ஓட்டிவந்த நவீன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story