புள்ளம்பாடி அருகே குடிநீர் தொட்டியில் சாணத்தை கரைத்து மாசுபடுத்திய வார்டு உறுப்பினர் கைது


புள்ளம்பாடி அருகே குடிநீர் தொட்டியில் சாணத்தை கரைத்து மாசுபடுத்திய வார்டு உறுப்பினர் கைது
x
தினத்தந்தி 7 May 2020 3:28 AM GMT (Updated: 7 May 2020 3:28 AM GMT)

புள்ளம்பாடி அருகே குடிநீர் தொட்டியில் சாணத்தை கரைத்து மாசுபடுத்திய ஊராட்சி வார்டு உறுப்பினரை போலீசார் கைது செய்தனர்.

கல்லக்குடி, 

புள்ளம்பாடி அருகே குடிநீர் தொட்டியில் சாணத்தை கரைத்து மாசுபடுத்திய ஊராட்சி வார்டு உறுப்பினரை போலீசார் கைது செய்தனர்.

வார்டு உறுப்பினர் கைது

புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரத்தூர் கிராமத்தில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் தரைமட்ட தொட்டியில் அந்த கிராமத்தை சேர்ந்த ஊராட்சி வார்டு உறுப்பினர் சக்திவேல்(வயது 27) சம்பவத்தன்று மாட்டு சாணத்தை கரைத்தார்.

இதனால் குடிநீர் தொட்டியில் இருந்த நீர் மாசடைந்தது. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதுபற்றி அறிந்த கிராம நிர்வாக அதிகாரி அந்தோணி ராஜா, வார்டு உறுப்பினரிடம் சென்று கேட்டுள்ளார். அப்போது, அவரை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன் அவருக்கு சக்திவேல் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.

சாராய ஊறல் அழிப்பு

* திருச்சி குளாப்பட்டி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் சாராய ஊறல் போட்டிருந்ததை ஏர்போர்ட் போலீசார் கண்டுபிடித்து அழித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எலிமருந்து தின்ற சிறுமி பலி

* திருச்சி காஜாபேட்டை கள்ளுக்காரத்தெருவை சேர்ந்த விஜயனின் மகள் அபர்ணா(13) நேற்று முன்தினம் விளையாட்டுத் தனமாக எலி மருந்தை தின்றுவிட்டார். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சிறுமி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந் தார்.

புறா கூண்டு வியாபாரி மீது தாக்குதல்

* திருச்சி பாலக்கரை வேப்பிலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த புறா கூண்டு வியாபாரியான குருமூர்த்தியிடம்(56) காஜாப்பேட்டை பகுதியை சேர்ந்த பாபு(25) புறா கூண்டு வாங்க வந்தபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாபு, குருமூர்த்தியை தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

செம்மண் விற்றவர் கைது

* குணசீலம் அருகே உள்ள சென்னக்கரை கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(32), தனது வயலில் இருந்த செம்மண்ணை அரசு அனுமதியின்றி டிராக்டரில் ஏற்றி விற்பனை செய்ததாக அவரை வாத்தலை போலீசார் கைது செய்தனர்.

சூதாடிய 4 பேர் கைது

* வடக்கிப்பட்டியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய 4 பேரை வாத்தலை போலீசார் கைது செய்தனர்.

பெண் தர்ணா

* திருச்சி இ.பி.ரோட்டை சேர்ந்தவர் சுதா(35) நேற்று திருச்சி கோட்டை போலீஸ் நிலையம் வந்து தனது கணவர் குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமல் இருப்பதாகவும், இதனால் தனது 2 குழந்தைகளுடன் வறுமையில் வாடி வருவதாகவும் புகார் அளித்தார். மேலும், கணவர் மீது நடவடிக்கை கோரி போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டார்.

முயல் வேட்டையாடியவர் கைது

* சமயபுரம் அருகே கண்ணனூர் வனப்பகுதியில் முயல் வேட்டையில் ஈடுபட்ட திருச்சி பகளவாடியை சேர்ந்த ரவியை(27)வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு முயல், மோட்டார் சைக்கிள், முயல் பிடிக்க பயன்படுத்தும் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தப்பி ஓடிய அம்மாப்பேட்டையை சேர்ந்த வாலிபரை தேடி வருகிறார்கள்.

Next Story