தோகைமலை அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி போலீசார் விசாரணை


தோகைமலை அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 7 May 2020 4:04 AM GMT (Updated: 7 May 2020 4:04 AM GMT)

தோகைமலை அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தோகைமலை, 

தோகைமலை அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவன் பலி

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள நாகனூர் கிழக்குகளம் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் மாரிமுத்து (வயது 17). இவர் 12-ம் வகுப்பு படித்து முடித்து வீட்டில் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று மதியம் நாகனூரில் உள்ள மணி என்பவர் தோட்டத்திற்கு மாரிமுத்து குளிப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது, மாரிமுத்து நிலைதடுமாறி 90 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் நாகனூர் கிராம நிர்வாக அதிகாரி (பொறுப்பு) ராஜலிங்கத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் அவர் மணப்பாறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் விசாரணை

தகவலின்பேரில், தீயணைப்பு படைவீரர்கள் மற்றும் தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி மாரிமுத்துவின் உடலை மீட்டனர். பின்னர் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மாரிமுத்துவின் தாய் சரசு தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் குளிக்க சென்ற சிறுவன் தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story