மாணவியுடன் தனியாக பேசிக்கொண்டு இருந்தபோது தாக்குதல்: படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு - கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை


மாணவியுடன் தனியாக பேசிக்கொண்டு இருந்தபோது தாக்குதல்: படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு - கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 10 May 2020 10:00 PM GMT (Updated: 11 May 2020 1:48 AM GMT)

மாணவியுடன் தனியாக பேசிக்கொண்டு இருந்த போது தாக்குதலுக்கு ஆளான வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சின்னாம்பாளையத் தை சேர்ந்தவர் கவுதம்(வயது 21). இவருக்கும், 14 வயது பள்ளி மாணவி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத போது கவுதம் சென்றார். அவர் மாணவி யுடன் தனியாக பேசிக்கொண்டு இருந்தனர். அதை பார்த்து மாணவியின் தாய், அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் மாணவியின் தந்தை, தாய்மாமா, அண்ணன் ஆகியோருக்கு தகவல் கொடுத்தார். உடனே அங்கு வந்த அவர்கள் 3 பேரும், கவுதமை, கிரிக்கெட் மட்டையால் தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

அவரை அவரது நண்பர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தந்தை உள்பட 3 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கவுதம் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story