டிக்டாக் வீடியோவால் நடந்த வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் போலீசில் சரண்


டிக்டாக் வீடியோவால் நடந்த வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் போலீசில் சரண்
x
தினத்தந்தி 13 May 2020 12:08 AM GMT (Updated: 13 May 2020 12:08 AM GMT)

டிக்டாக் வீடியோவால் நடந்த வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் போலீசில் சரணடைந்தனர்.

சிப்காட்(ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டை மகாவீர் நகரை சேர்ந்தவர் போஸ் (வயது23). இவருக்கும், உதயா, அஜீத், விஜய், வருண்ராஜ், அக்ரம், ஆகாஷ், ராஜசேகர் ஆகிய 7 பேருக்கும் இடையே டிக்டாக் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த போஸ் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதை குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து ராணிப்பேட்டையை சேர்ந்த ராஜசேகர் (24), வருண்ராஜ் (26) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் 5 பேரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் போஸ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த விஜய் (24), உதயகுமார் (20), அஜித் (22), ஆகாஷ் (23), அக்ரம் (21) ஆகிய 5 பேரும் நேற்று ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். ஏற்கனவே போலீசார் கைது செய்த ராஜசேகர், வருண்ராஜ் மற்றும் சரண் அடைந்த விஜய் ஆகியோர் பொன்னை அருகே நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story