ஜார்கண்ட், உத்தரபிரதேசத்துக்கு 2 சிறப்பு ரெயில்களில் வட மாநிலத்தவர்கள் 3 ஆயிரம் பேர் பயணம்


ஜார்கண்ட், உத்தரபிரதேசத்துக்கு 2 சிறப்பு ரெயில்களில் வட மாநிலத்தவர்கள் 3 ஆயிரம் பேர் பயணம்
x
தினத்தந்தி 14 May 2020 10:30 PM GMT (Updated: 14 May 2020 10:19 PM GMT)

சென்னையில் இருந்து ஜார்கண்ட், உத்தரபிரதேசத்துக்கு 2 சிறப்பு ரெயில்கள் மூலம் 3 ஆயிரம் வட மாநிலத்தவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.

சென்னை, 

ஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அந்தந்த மாநில அரசுகள் மீட்டு முகாம்களில் தங்க வைத்து, அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து வருகின்றன. 

அவர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ‘ஷர்மிக்’ சிறப்பு ரெயில்களை ரெயில்வே இயக்கி வருகிறது.

அந்தவகையில் தமிழகத்துக்கு புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்களை தமிழக அரசு சிறப்பு ரெயில்கள் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்து வருகிறது. அதன்படி நேற்று ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்களுக்கு சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து 2 ‘ஷர்மிக்’ சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.

3 ஆயிரம் பேர்

மாலை 5.30 மணிக்கு 10-வது நடைமேடையில் இருந்து புறப்பட்ட ஜார்கண்ட் ரெயிலில் 1,464 வடமாநிலத் தொழிலாளர்கள் பயணம் மேற்கொண்டனர். அதேபோல் இரவு 7 மணிக்கு உத்தரபிரதேசம் மாநிலத்துக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரெயிலில் ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் என நேற்று மட்டுமே சுமார் 3 ஆயிரம் வட மாநிலத்தவர்கள் சிறப்பு ரெயில்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்காக சுமார் 3 மணி நேரத்துக்கு முன்பாக ரெயில் நிலையத்துக்குள் பஸ்களில் அழைத்து வரப்பட்ட வட மாநிலத்தவர்களுக்கு, உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர் கள் ரெயிலில் ஏற அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக முகாம்களில் இருந்து கிளம்பும் போது, அனைவருக்கும் தண்ணீர் பாட் டில்கள், உணவு பொட்டலங் கள், நொறுக்குத்தீனிகள் போன்றவை சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டன.

Next Story