படப்பை அருகே, மது குடிக்க மனைவி பணம் தராததால் முதியவர் தற்கொலை


படப்பை அருகே, மது குடிக்க மனைவி பணம் தராததால் முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 16 May 2020 10:45 PM GMT (Updated: 16 May 2020 10:09 PM GMT)

படப்பை அருகே மது குடிக்க மனைவி பணம் தராததால் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

படப்பை, 

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த சோமங்கலம் அருகே புதுநல்லூர் பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான் (வயது 70). இவருடைய மனைவி தங்கரத்தினம் (64). ஜான் அந்த பகுதியில் உள்ள கடைகளில் பஜ்ஜி, போண்டா செய்யும் தொழில் செய்து வந்தார்.

இவரது மனைவி வீட்டிலேயே சிறிய பெட்டிக் கடை நடத்தி வருகிறார். கொரோனா ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று டாஸ் மாக் கடைகள் திறக்கப்பட்டதால் ஜான் தனது மனைவி தங்கரத்தினத்திடம் மது குடிக்க பணம் கேட்டார்.

அதற்கு தங்கரத்தினம், சாப்பாட்டுக்கே பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக் கிறோம் இந்த நிலையில் மது குடிக்க பணம் கேட்கிறீர்களே என கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஜான் வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. காட்டுப்பகுதியில் உள்ள நாவல் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சோமங்கலம் போலீசார், ஜான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story