கர்நாடகத்தில் புதிதாக 130 பேருக்கு கொரோனா பாதிப்பு சுகாதாரத்துறை தகவல்


கர்நாடகத்தில் புதிதாக 130 பேருக்கு கொரோனா பாதிப்பு சுகாதாரத்துறை தகவல்
x
தினத்தந்தி 24 May 2020 10:30 PM GMT (Updated: 24 May 2020 7:35 PM GMT)

கர்நாடகத்தில் புதிதாக 130 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் புதிதாக 130 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 654 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 1,915 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 130 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இந்த வைரஸ் தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 2,045 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 654 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு 44 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

புதிதாக கொரோனா பாதித்தவர்களில் பெங்களூரு நகரில் ஒருவர், மண்டியாவில் 15 பேர், கலபுரகியில் 6 பேர், சிக்பள்ளாப்பூரில் 27 பேர், தாவணகெரேயில் 4 பேர், யாதகிரியில் 24 பேர், ஹாசனில் 14 பேர், பீதிரில் 6 பேர், உடுப்பியில் 23 பேர், விஜயாப்புராவில் ஒருவர், உத்தரகன்னடாவில் 2 பேர், தட்சிண கன்னடாவில் ஒருவர், தார்வாரில் ஒருவர், சிவமொக்காவில் 2 பேர், துமகூருவில் 2 பேர், குடகில் ஒருவர் உள்ளனர்.

மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களில் பலியானவர்கள், வீடு திரும்பியவர்களை தவிர்த்து பெங்களூருவில் 127 பேர், மண்டியாவில் 226 பேர், கலபுரகி 72 பேர், பெலகாவியில் 61 பேர், சிக்பள்ளாப்பூரில் 106 பேர், தாவணகெரேயில் 75 பேர், யாதகிரியில் 111 பேர், ஹாசனில் 98 பேர், மைசூருவில் 2 பேர், பீதரில் 62 பேர், பாகல்கோட்டையில் 34 பேர், உடுப்பியில் 72 பேர், விஜயாப்புராவில் 24 பேர், உத்தரகன்னடாவில் 36 பேர், ராய்ச்சூரில் 66 பேர், தட்சிண கன்னடாவில் 37 பேர், தார்வாரில் 29 பேர், கதக்கில் 30 பேர், சிவமொக்காவில் 34 பேர், பல்லாரியில் 19 பேர், துமகூருவில் 19 பேர், கோலாரில் 14 பேர், சித்ரதுர்காவில் 6 பேர், பெங்களூரு புறநகரில் 5 பேர், சிக்கமகளூருவில் 10 பேர், ஹாவேரியில் 5 பேர், கொப்பலில் 3 பேர், குடகில் 2 பேர், மற்றவர்கள் 8 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கர்நாடகத்தில் இதுவரை 2 லட்சத்து 6 ஆயிரத்து 313 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 10 ஆயிரத்து 117 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story