இன்று முதல் திறப்பு; மாநில எல்லைகளில் மதுக்கடைகளை போலீசார் ஆய்வு


இன்று முதல் திறப்பு; மாநில எல்லைகளில் மதுக்கடைகளை போலீசார் ஆய்வு
x
தினத்தந்தி 24 May 2020 10:47 PM GMT (Updated: 24 May 2020 10:47 PM GMT)

புதுவை மாநிலத்தில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதையொட்டி மதுக்கடைகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

பாகூர்,

புதுவை மாநிலத்தில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதையொட்டி பாகூர் முள்ளோடை பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர். மதுக்கடையில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய கடை உரிமையாளர்களிடம் வலியுறுத்தப்பட்டது.

மேலும் மதுக்கடையில் ஒலிபெருக்கி மூலம் மதுபிரியர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கட்டாயம் முகக்கவசம் அணிதல், ஒரு மீட்டர் இடைவெளி விட்டு மதுபாட்டில்கள் வாங்குதல் மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று மதுக்கடை உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர். இதேபோல் பாகூர், சோரியாங்குப்பம், கரையாம்புத்தூர், தவளக்குப்பம் பகுதிகளிலும் மதுக்கடைகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

Next Story