மேட்டூர் அணையில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஆய்வு


மேட்டூர் அணையில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஆய்வு
x
தினத்தந்தி 25 May 2020 3:44 AM GMT (Updated: 25 May 2020 3:44 AM GMT)

மேட்டூர் அணையில் பொதுப்பணித்துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.

மேட்டூர்,

பொதுப்பணித்துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, மேட்டூர் அணையில் பருவகால ஆய்வை மேற்கொள்ள நேற்று மேட்டூர் வந்தார். அணையின் வலதுகரை, இடது கரை, ஆய்வுச்சுரங்கம், கவர்னர் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். அணையின் நீர் இருப்பு மற்றும் வெளியேற்றம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக மேட்டூர் உபரிநீர் திட்டத்துக்கு தண்ணீர் எடுக்கும் இடமான திப்பம்பட்டி பகுதிக்கு நேரில் சென்று அங்கு நடைபெற்று வரும் ஆயத்த பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக மேட்டூர் வந்த தலைமை பொறியாளர் ராமமூர்த்தியை, சேலம் வட்ட கண்காணிப்பு பொறியாளர் ஜெயகோபால், மேட்டூர் அணை நிர்வாக பொறியாளர் தேவராஜன், உதவி பொறியாளர் மதுசூதனன் ஆகியோர் வரவேற்றனர்.

நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 100.36 அடியாக இருந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு 1,787 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 2,118 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப் படுகிறது.

Next Story