மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம்; கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்


மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம்; கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்
x
தினத்தந்தி 29 May 2020 12:28 AM GMT (Updated: 29 May 2020 12:28 AM GMT)

புதுச்சேரியில் மீனவர் களுக்கு மீன்பிடி தடைக் கால நிவாரணம் வழங்க கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப் படுகிறது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மார்ச் மாதம் 24-ந் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதனால் அன்று முதல் விசைப்படகுகளில் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இந்தநிலை யில் மீன்பிடி தடைக்காலத்தை குறைக்க வேண்டும் என்று மீனவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து மீன்பிடி தடைக்காலத்தை வரும் 31-ந் தேதியுடன் முடித்துக் கொள்வதாகவும், வரும் 1-ந் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என்றும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த வகையில் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதற்காக மீனவர்கள் தயாராகி வருகிறார்கள்.

மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை அரசு விரைவாக வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் அந்த கோப்புக்கு ஒப்புதல் அளித்து சமூக வலைதளத்தில் கவர்னர் கிரண்பெடி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்ப தாவது:-

மீனவ சொசைட்டி உறுப் பினர்கள் ஆண்டுக்கு ரூ.1,500 சேமித்து வந்தால் மத்திய அரசு ரூ.3,000 சேர்த்து ரூ.4,500 தரும். அதன்படி 7,965 மீனவர்களுக்கு ரூ.3½ கோடிக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.

அதேபோல் மீன்பிடி தடைக்கால நிவாரண மாக ஆண்டுதோறும் மாநில அரசு ரூ.5,500 வழங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 19,100 பேருக்கு ரூ.11 கோடி வழங்குவதற்கான கோப்புக்கு அனுமதி தரப்பட் டுள்ளது.

இதில் அங்கீகரிக் கப்பட்ட திட்டங்களையும், பொதுப்பணத்தையும் நாங்கள் கையாள்கிறோம். சரியானவர்களுக்கு நிதி சென்றடைகிறதா? என்பதை ஆராய்வது அவசியம். அதன்படியே அரசு பணம் தகுதியானவர்களுக்கு செல்கிறது.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

இதுதொடர்பாக தலைமை செயலகத்துக்கு ஒரு உத்தரவை அனுப்பி உள்ளார். அதில், ‘பயனாளிகள் பட்டியலை நிர்வாகத் துறையானது, நிதித்துறையிடம் ஒப்படைத்து தலைமைச்செயலர் சரிபார்க்க வேண்டும். இந்திய அரசு வழிகாட்டு நெறிமுறைப்படி இதை சரிபார்ப்பது அவசியம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story