சிறுமி பாலியல் பலாத்காரம் ; தொழிலாளிக்கு போலீஸ் வலைவீச்சு


சிறுமி பாலியல் பலாத்காரம் ; தொழிலாளிக்கு போலீஸ் வலைவீச்சு
x

விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அருகே உள்ள சின்னகுச்சிப்பாளையத்தை சேர்ந்த 11 வயதுடைய சிறுமி கோலியனூரில் உள்ள அரசு பள்ளியில் தற்போது 5-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.

விழுப்புரம்,

சிறுமியின்  தாய் ஏற்கனவே இறந்து விட்டார். தந்தை ஆந்திரா மாநிலத்தில் தங்கியிருந்து கரும்பு வெட்டும் தொழில் செய்து வருகிறார்.இதனால் அந்த சிறுமி, சின்னகுச்சிப்பாளையத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறாள்.

இந்த சூழலில் சின்னகுச்சிப்பாளையம் காலனி பகுதியை சேர்ந்த தொழிலாளி செந்தில் என்கிற ராஜூ (வயது 47) என்பவர் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி சாலைஅகரத்தில் உள்ள கொய்யா தோப்புக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமி, அழுதுகொண்டே வந்து தனது பாட்டியிடம் கூறினாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், இதுபற்றி உடனடியாக வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் செந்தில் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றன

Next Story