கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது


கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது
x
தினத்தந்தி 7 Jun 2020 11:31 PM GMT (Updated: 7 Jun 2020 11:31 PM GMT)

திருவள்ளுரில், கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது செய்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பீமன் தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 56). இவர் கடந்த 2017ம் ஆண்டு குடும்ப தகராறு காரணமாக தனது மாமியார் பார்வதியம்மாள் (80) என்பவரை கொலை செய்தார்.

இது தொடர்பாக புல்லரம்பாக்கம் போலீசார் ராதாகிருஷ்ணனை கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த அவர் தலைமறைவாகி விட்டார். இதைத்தொடர்ந்து 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அவரை நேற்று கைது செய்த புல்லரம்பாக்கம் போலீசார், திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story