எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு ‘ஹால்டிக்கெட்’டுடன் முக கவசம்


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும்  மாணவ, மாணவிகளுக்கு ‘ஹால்டிக்கெட்’டுடன் முக கவசம்
x
தினத்தந்தி 9 Jun 2020 1:48 AM GMT (Updated: 9 Jun 2020 1:48 AM GMT)

தேனி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு ‘ஹால்டிக்கெட்’டுடன் முக கவசம் வழங்கப்பட்டது.

தேனி,

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு நேற்று பள்ளிகளில் ‘ஹால்டிக்கெட்’ மற்றும் முக கவசம் வழங்க அரசு உத்தரவிட்டது. தேனி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 16 ஆயிரத்து 195 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் ‘ஹால்டிக்கெட்’ மற்றும் தலா 2 முக கவசங்கள் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு செல்போன் மூலமும், பள்ளிக்கு அருகாமையில் உள்ள மாணவ, மாணவிகளை நேரிலும் தொடர்பு கொண்டு பள்ளிக்கு வரவழைத்தனர். பள்ளிகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து மாணவ-மாணவிகளுக்கு ‘ஹால்டிக்கெட்’, முக கவசங்கள் வழங்கும் பணி நடந்தது. அதன்படி தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் முக கவசம், ‘ஹால்டிக்கெட்’ ஆகியவற்றை வழங்கி, தேர்வை சிறப்பாக எழுத வாழ்த்து தெரிவித்தனர்.
தேனி,ஜூன்.9-

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு நேற்று பள்ளிகளில் ‘ஹால்டிக்கெட்’ மற்றும் முக கவசம் வழங்க அரசு உத்தரவிட்டது. தேனி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 16 ஆயிரத்து 195 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் ‘ஹால்டிக்கெட்’ மற்றும் தலா 2 முக கவசங்கள் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு செல்போன் மூலமும், பள்ளிக்கு அருகாமையில் உள்ள மாணவ, மாணவிகளை நேரிலும் தொடர்பு கொண்டு பள்ளிக்கு வரவழைத்தனர். பள்ளிகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து மாணவ-மாணவிகளுக்கு ‘ஹால்டிக்கெட்’, முக கவசங்கள் வழங்கும் பணி நடந்தது. அதன்படி தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் முக கவசம், ‘ஹால்டிக்கெட்’ ஆகியவற்றை வழங்கி, தேர்வை சிறப்பாக எழுத வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story