மாணவியை கடத்தி திருமணம் ; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


மாணவியை கடத்தி திருமணம் ;  போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 10 Jun 2020 6:24 AM GMT (Updated: 10 Jun 2020 6:24 AM GMT)

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் குப்பாண்டபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் (வயது 27).


அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் ஆப்பக் கூடல் பகுதியில் சுபாஷ் கட்டிட வேலை பார்த்து வந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த பெண்ணிடம் அவர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார்.

இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோர் ஆப்பக்கூடல் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியையும், சுபாசையும் தேடி வந்தனர். அப்போது சுபாஷ் குப்பாண்டபாளையத்தில் உள்ள தனது வீட்டில் மாணவியுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் அவர் மாணவியை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் சுபாசிடம் இருந்து அந்த மாணவியை மீட்டனர்.

இதுதொடர்பாக போலீசார் சுபாசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவர் பவானி ஜே.எம்.கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story