செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 136 பேர் கொரோனாவால் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 136 பேர் கொரோனாவால் பாதிப்பு
x
தினத்தந்தி 14 Jun 2020 1:31 AM GMT (Updated: 14 Jun 2020 1:31 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 136 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி பாலாஜி நகரில் வசிக்கும் 28 வயது வாலிபர், டி.வி.கே. தெருவை சேர்ந்த 33 வயது வாலிபர், பிரியா தெருவை சேர்ந்த 76 வயது முதியவர், கற்பகாம்பாள் நகர் பகுதியை சேர்ந்த 74 வயது முதியவர், ஊரப்பாக்கம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த 42 வயது ஆண், பாரதி நகர் 2வது தெருவை சேர்ந்த 39 வயது ஆண் ஆகியோர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட காட்டாங்கொளத்தூர் பகுதியை சேர்ந்த 28 வயது இளம்பெண், காட்டாங்கொளத்தூர் ரெயில்வே ஸ்டேஷன் தெருவில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 51 வயது ஆண், 40 வயது பெண், 17 வயது சிறுவன், இதே தெருவில் மற்றொரு குடும்பத்தை சேர்ந்த 39 வயது ஆண், 18 வயது வாலிபர், ரெயில் நகர் பகுதியில் வசிக்கும் 69 வயது முதியவர், அகத்தியர் தெருவில் வசிக்கும் 40 வயது ஆண் ஆகியோருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதியானது.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 136 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,705 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 1,150 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 70 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது. மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சாலமங்கலத்தில் 37 வயது ஆண், மாடம்பாக்கம் புவனேஸ்வரி நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி, 40 வயது ஆண் மற்றும் 2 வயது சிறுமி மற்றும் வரதராஜபுரம் பகுதியில் 16 மற்றும் 17 வயது இளம்பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 672 ஆனது. இவர்களில் 408 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 258 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 பேர் உயிரிழந்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 78 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,797 ஆனது.

இவர்களில் 848 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 928 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 21 பேர் உயிரிழந்தனர்.

Next Story