செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் 162 பேர் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் 162 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 18 Jun 2020 12:02 AM GMT (Updated: 18 Jun 2020 12:02 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 162 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மணிமேகலை தெருவில் வசிக்கும் 29 வயது வாலிபர், கணபதி நகர் பகுதியை சேர்ந்த 45 வயது ஆண் உள்பட 5 பேர், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட கொளப்பாக்கம் ஜனகபுரி 2-வது தெருவை சேர்ந்த 8 வயது சிறுமி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட வண்டலூர் புத்தர் தெருவில் வசிக்கும் 46 வயது பெண், 24 வயது வாலிபர், லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்த 66 வயது முதியவர், மண்ணிவாக்கம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த 52 வயது ஆண், காரணைப்புதுச்சேரி கோகுலம் காலனி ரவி தெருவை சேர்ந்த 36 வயது ஆண் உள்பட 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 162 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,271 ஆக உயர்ந்தது. இவர்களில் 1,597 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 65 வயது முதியவர், 74 வயது மூதாட்டி, 41 வயது ஆண் ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்தது. மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரே குடும்பத்தில் 3 பேர்

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர், மணிகண்டன் நகர் பகுதியைச் சேர்ந்த 33 வயது பெண்ணுக்கும், அவருடைய 10 வயது மகள் மற்றும் 7 வயது மகன் என ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 3 பேரும் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் குன்றத்தூர், வெங்கடாபுரத்தைச் சேர்ந்த 56 வயது நபருக்கும், கொல்லச்சேரியை சேர்ந்த 35 வயது வாலிபர், கோவூரை சேர்ந்த 61 வயது மற்றும் 56 வயதுடைய நபருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் ஊராட்சியில் 36 வயது அ.தி.மு.க. பிரமுகர் ஒருவருக்கும், படப்பை அடுத்த வரதராஜபுரம் பூங்கா தெரு பகுதியை சேர்ந்த 49 வயது ஆண் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 61 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 864 ஆனது. இவர்களில் 459 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 395 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 பேர் பலியானார்கள்.

2 ஆயிரத்தை தாண்டியது

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 90 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,037 ஆக உயர்ந்தது. இவர்களில் 1,020 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 986 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 31 பேர் இறந்து உள்ளனர்.

Next Story