பாகூர் அருகே, மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; நெல் வியாபாரி பலி


பாகூர் அருகே, மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; நெல் வியாபாரி பலி
x
தினத்தந்தி 16 July 2020 9:45 PM GMT (Updated: 17 July 2020 1:07 AM GMT)

பாகூர் அருகே மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் நெல் வியாபாரி பரிதாபமாக பலியானார்.

பாகூர், 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலத்தூரை சேர்ந்தவர் சேகர் (வயது 48). நெல் வியாபாரி. சம்பவத்தன்று இவர் நெல் வியாபாரம் தொடர்பாக பாகூர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். கரிக்கலாம்பாக்கம் - பாகூர் சாலையில் அரங்கனூர் என்ற இடத்தில் வந்தபோது திடீரென்று மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தில் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சேகர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி சேகர் பரிதாபமாக இறந்துபோனார். இது குறித்து பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story