குடும்பத் தகராறில் விஷம் குடித்து போலீஸ் ஏட்டு தற்கொலை

குடும்பத் தகராறில் விஷம் குடித்து போலீஸ் ஏட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பெரம்பூர்,
சென்னை பெரம்பூரில் உள்ள செம்பியம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் ஜோசப் (வயது 39). இவர், புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் ஏட்டுவாக வேலை செய்து வந்தார். இவருக்கு ஜெகதீஸ்வரி என்ற மனைவியும், 12 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
ஜோசப்புக்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெகதீஸ்வரி, கணவருடன் கோபித்துக்கொண்டு சென்னை ஓட்டேரியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு மகன், மகளுடன் சென்றுவிட்டார்.
இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே தனியாக மன வருத்தத்தில் இருந்து வந்த ஜோசப், நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்த போலீஸ் ஏட்டு ஜோசப் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர், கடன் தொல்லையால் தற்கொலை செய்தாரா? அல்லது பணிச்சுமை காரணமா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story