ராமரின் அருளால் கொரோனா வைரஸ் காணாமல் போய்விடும் சிவசேனா நம்பிக்கை


ராமரின் அருளால் கொரோனா வைரஸ் காணாமல் போய்விடும் சிவசேனா நம்பிக்கை
x
தினத்தந்தி 4 Aug 2020 7:04 PM GMT (Updated: 4 Aug 2020 7:04 PM GMT)

ராமரின் அருளால் கொரோனா வைரஸ் காணாமல் போய்விடும் என சிவசேனா கூறியுள்ளது.

மும்பை,

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று(புதன்கிழமை) நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். இந்தநிலையில் ராமரின் அருளால் கொரோனா வைரஸ் காணாமல் போய்விடும் என சிவசேனா நம்பிக்கை தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் பத்திரிகையான ‘சாம்னா’ தலையங்கத்தில் கூறியிருப்பதாவது-

அயோத்தியில் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டுவது போன்ற பொன்னான தருணம் வேறு எதுவும் இருக்க முடியாது. கொரேனா வைரஸ் இருக்கிறது. ஆனால் ராமரின் அருளால் அது மறைந்துவிடும்.

காணாமல் போய்விடும்

ராமர் கோவில் கட்டப்படுவதற்கு முக்கிய காரணமாக உள்ள தலைவர்கள் அத்வானி, ஜோஷி ஆகியோர் டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் விழாவில் கலந்துகொள்வார்கள். இதேபோல முக்கிய தலைவரான உமா பாரதியும் நேரடியாக விழாவில் கலந்து கொள்ளவில்லை. அடிக்கல் நாட்டு விழாவால் நாடே மிகவும் ஆவலுடன் உள்ளது.

கொரோனா வைரஸ் அயோத்தி, உத்தரபிரதேசம் மற்றும் ஒட்டு மொத்த நாட்டிலும் பரவி உள்ளது. ஆனால் இந்த பிரச்சினை கடவுள் ராமரின் அருளால் காணாமல் போய்விடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story