கள்ளக்குறிச்சி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை


கள்ளக்குறிச்சி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 7 Aug 2020 7:27 AM GMT (Updated: 7 Aug 2020 7:27 AM GMT)

கள்ளக்குறிச்சி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே உள்ள தச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் வரதன் மகன் லோகநாதன் (வயது 30). இவருக்கும் கடலூர் மாவட்டம் புல்லூர் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகள் பச்சையாம்மாள்(21) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 1 மணி அளவில் லோகநாதன் தனது மாமியார் செல்லப்பாங்கியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, பச்சையம்மாள் தூக்குப்போட்டு இறந்து விட்டதாக கூறினார். இதையடுத்து பச்சையம்மாளின் உறவினர்கள் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது அவர் வீட்டில் பிணமாக தொங்கினார். இதற்கிடையே இதுபற்றி அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பச்சையம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செல்லப்பாங்கி, போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பச்சையம்மாள் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story