வேலூர், ராணிப்பேட்டையில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 4 பேர் பலி


வேலூர், ராணிப்பேட்டையில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 4 பேர் பலி
x
தினத்தந்தி 13 Aug 2020 4:42 PM GMT (Updated: 13 Aug 2020 4:42 PM GMT)

வேலூர், ராணிப்பேட்டையில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் வேலூர் அடுக்கம்பாறை மற்றும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்தந்த மாவட்டத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களிலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டாலும் சிலர் சிகிச்சை பலனின்றி இறந்து விடுகின்றனர்.

அதன்படி 4 பேர் உயிரிழந்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

பள்ளிகொண்டா டி.பி.எஸ்.நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 75). இவர் கொரோனா பாதிக்கப்பட்டு கடந்த 9-ந் தேதி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல தெலுங்கானா மாநிலம் மாதாபூர் ரங்கா பகுதியை சேர்ந்தவர் பேரின்மாளா சீனிவாசலு என்பவர் நேற்று முன்தினம் இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் பேரணாம்பட்டு முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைசாமி (61). இவர் கொரோனா அறிகுறி காரணமாக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உடல் அடக்கம்

ராணிப்பேட்டை புலித்தெருவை சேர்ந்த சித்ரா (49) என்பவர் கொரோனா தொற்று காரணமாக வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

அவரது உடல் அரசு வழிகாட்டுதலின்படி சுகாதாரதுறையினர் ராணிப்பேட்டையில் அடக்கம் செய்தனர். 

Next Story