திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 323 பேர் பாதிப்பு


திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 323 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 28 Aug 2020 1:31 AM GMT (Updated: 28 Aug 2020 1:31 AM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 323 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 323 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 23 ஆயிரத்து 627 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 21 ஆயிரத்து 654 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 1575 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரையில் 398 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 13 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட வண்டலூர் காமராஜர் தெருவை சேர்ந்த 34 வயது வாலிபர், பஜனை கோவில் பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர், கலைமகள் தெருவை சேர்ந்த 23 வயது வாலிபர், லட்சுமி நகர் 3-வது தெருவில் வசிக்கும் 23 வயது இளம்பெண் மற்றும் ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, நந்திவரம், ஆகிய பகுதியில் வசிக்கும் 22 பேர், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட நெடுங்குன்றம் கிராமத்தில் உள்ள டி.வி.எஸ்.அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 62 வயது மூதாட்டி, 62 வயது முதியவர், 9 வயது சிறுமி, மற்றும் அதே பகுதியில் வசிக்கும் 64 வயது முதியவர், 37 வயது ஆண், 44 வயது ஆண், மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 298 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 749 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 21 ஆயிரத்து 763 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 8 சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 396 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 590 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி பகுதியை சேர்ந்த 67 வயது மூதாட்டி 22, 40, 40 வயதுடைய ஆண்கள் மற்றும்? ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 33 வயது ஆண் காரணித்தாங்கல் பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி, ஒரகடம் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஆண் மாடம்பாக்கம் கபாலிநகர் பகுதியை சேர்ந்த 53 வயது பெண், சாலமங்கலம் பகுதியை சேர்ந்த 50 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைத்தொடர்ந்து இவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களையும் சேர்த்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 256 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 530 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 14 ஆயிரத்து 6 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 3 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 228 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 296 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story