அதியமான்கோட்டை, கிருஷ்ணகிரியில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


அதியமான்கோட்டை, கிருஷ்ணகிரியில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Aug 2020 10:00 PM GMT (Updated: 29 Aug 2020 2:54 AM GMT)

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி அதியமான்கோட்டை, கிருஷ்ணகிரியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி அதியமான்கோட்டை வானொலி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சித்தையன், நகர தலைவர் செந்தில்குமார், வட்டார தலைவர் காமராஜ் மற்றும் வட்டார தலைவர் சரவணன், விவசாய அணி நிர்வாகி மணிகண்டன், பிற்பட்டோர் அணி நிர்வாகி நவீன், மாணவர் காங்கிரஸ் நிர்வாகி சக்தி மணிகண்டன், பென்னாகரம் தொகுதி தலைவர் ஜீவா, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி அருள்குமார், வட்டார துணைத்தலைவர் கிருஷ்ணன் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நேற்று காலை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், நீட் தேர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். நகர தலைவர் வின்சென்ட் வரவேற்றார். நகர துணைத்தலைவர் இருதயம், மாவட்ட செயலாளர்கள் லண்டன் கோபால், சங்கர், வட்டார தலைவர் ஜகாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது, கொரோனா நோய் தொற்று காலத்தில், அனைத்து விதத்திலும் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கைக்கு எதிராக நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், தேர்வை நடத்த முயற்சி செய்யும் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் நிர்வாகிகள் துரைசாமி, ரமேஷ், மணிரத்தினம், சக்கரவர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

Next Story