போலீசாருக்கு கொரோனா தொற்று வாலாஜாபாத் போலீஸ்நிலையம் மூடல்


போலீசாருக்கு கொரோனா தொற்று வாலாஜாபாத் போலீஸ்நிலையம் மூடல்
x
தினத்தந்தி 31 Aug 2020 12:54 AM GMT (Updated: 31 Aug 2020 12:54 AM GMT)

வாலாஜாபாத் போலீஸ் நிலையத்தில், போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி, போலீஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

வாலாஜாபாத்,

வாலாஜாபாத் போலீஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என 20-க்கும் மேற்பட்டோர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். அங்கு பணியாற்றும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீ சார் உள்ளிட்ட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து போலீஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

போலீஸ் நிலைய பணிகள் பாதிக்காத வகையில் வாலாஜாபாத் இந்திரா நகர் போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் குடியிருப்பில் தற்காலிகமாக போலீஸ் நிலையம் செயல்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா அறிவித்துள்ளார்.

Next Story