சேலம் மாவட்டத்தில் புதிய உச்சம்: ஒரே நாளில் 497 பேருக்கு கொரோனா - பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது


சேலம் மாவட்டத்தில் புதிய உச்சம்: ஒரே நாளில் 497 பேருக்கு கொரோனா - பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 31 Aug 2020 10:30 PM GMT (Updated: 1 Sep 2020 1:52 AM GMT)

சேலம் மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 497 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 326 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று புதிய உச்சமாக ஒரே நாளில் 497 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 329 பேர், ஆத்தூரில் 26 பேர், சேலம் ஒன்றியத்தில் 17 பேர், ஓமலூரில் 16 பேர், எடப்பாடியில் 11 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 9 பேர், மகுடஞ்சாவடியில் 8 பேர், வீரபாண்டி, அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளில் தலா 7 பேர், கொங்கணாபுரம், தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் தலா 6 பேர், மேட்டூர், சங்ககிரி, வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா 5 பேர், நங்கவள்ளி, கெங்கவல்லி, தலைவாசல், ஏற்காடு ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், காடையாம்பட்டி, நரசிங்கபுரம், சரங்கபிள்ளையூர் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நாமக்கல்லில் இருந்து சேலம் வந்த 22 பேர், ஈரோட்டில் இருந்து சேலம் வந்த 2 பேர், கோவை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த தலா ஒருவரும் மற்றும் புதுடெல்லியில் இருந்து சேலம் வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 74 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 390 பேர் குணமடைந்து விட்டதால், அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

Next Story