கீழப்பழுவூர் அருகே, லாரி மோதி வாலிபர் பலி - உடலை உடனடியாக ஒப்படைக்க கோரி உறவினர்கள் மறியல்


கீழப்பழுவூர் அருகே, லாரி மோதி வாலிபர் பலி - உடலை உடனடியாக ஒப்படைக்க கோரி உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 2 Sep 2020 8:45 PM GMT (Updated: 3 Sep 2020 1:33 AM GMT)

கீழப்பழுவூர் அருகே லாரி மோதி வாலிபர் பலியானார். இந்த நிலையில் அவரது உடலை உடனடியாக ஒப்படைக்க கோரி அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக் குட்பட்ட கீழப்பழுவூர் அருகே உள்ள திடீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகன் சங்கர் (வயது 28). இவர் கீழப்பழுவூரில் உள்ள தனியார் சிமெண்டு ஆலையில், கிரஷரில் ஆப்ப ரேட்டராக வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம், சங்கர் அரியலூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வி.கைகாட்டியில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அஸ்தினாபுரம் அருகே சென்ற போது, அந்த வழியாக வந்த லாரி சங்கர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை, அந்த பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந் தார்.

இந்த நிலையில் நேற்று மாலை வரை சங்கர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக் கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் உடலை பிரேத பரிசோதனை செய்து உட னடியாக ஒப்படைக்கக்கோரி கீழப்பழுவூர் அடுத்த திடீர்குப்பம் பகுதியில் தஞ்சை-அரியலூர் சாலையில் நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் உடலை உடனடியாக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்த அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story