திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு 300 பேர் பாதிப்பு


திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு 300 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 13 Sep 2020 10:30 PM GMT (Updated: 13 Sep 2020 7:59 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 300 பேர் பாதிக்கப்பட்டனர்.

திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் ஒரே நாளில் 300 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். மாவட்ட முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 325 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 25 ஆயிரத்து 762 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 476 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 87 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வண்டலூர்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி பகுதியில் உள்ள பனகாட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த 59 வயதுடைய ஒருவர், பெரியார் தெருவில் வசிக்கும் 57 வயது ஆண், ஊரப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 21 வயது இளைஞர், நந்திவரம் கோவிந்தராஜபுரம் பகுதியில் வசிக்கும் 62 வயது முதியவர், குமிழி மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் 21 வயது வாலிபர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று மட்டும் 299 பேர் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 366 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 27 ஆயிரத்து 898 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 481 ஆக உயர்ந்தது. ஆயிரத்து 987 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படப்பை

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி பகுதியை சேர்ந்த 20 வயது பெண், 75 வயது மூதாட்டி, ஆதனூர் பகுதியை சேர்ந்த 63 வயது மூதாட்டி, வஞ்சுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த 27 வயது வாலிபர் ஆகியோரையும் சேர்த்து, மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 189 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 425 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 17 ஆயிரத்து 863 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்த நிலையில், மாவட்டத்தில் பலியானோரின் எண்ணிக்கை 289 ஆக உயர்ந்தது. ஆயிரத்து 273 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story