செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 299 பேர் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 299 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 24 Sep 2020 10:30 PM GMT (Updated: 24 Sep 2020 9:15 PM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 299 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.

வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஊரப்பாக்கம் ஓம் சக்தி செந்தில் நகரை சேர்ந்த 54 வயது ஆண், கணபதி நகரை சேர்ந்த 48 வயது பெண், கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 63 வயது மூதாட்டி, கூடுவாஞ்சேரி பெரியார் ராமசாமி தெருவில் வசிக்கும் 8 வயது சிறுவன், 2 வயது சிறுமி, 19 வயது இளம்பெண், 37 வயது பெண், 38 வயது ஆண், 51 வயது பெண், நந்திவரம் கோவிந்தராஜபுரம் 2-வது தெருவில் வசிக்கும் 51 வயது பெண், 65 வயது முதியவர், 28 வயது இளம்பெண், மண்ணிவாக்கம் மேட்டு தெருவை சேர்ந்த 11 வயது சிறுமி, புது நகர் பகுதியை சேர்ந்த 27 வயது வாலிபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட காட்டாங்கொளத்தூர் மாதா கோவில் தெருவில் வசிக்கும் 42 வயது ஆண், சிலப்பதிகாரம் தெருவில் வசிக்கும் 35 வயது வாலிபர், பேரமனூர் விவேகானந்தர் தெருவில் வசிக்கும் 23 வயது இளைஞர், 32 வயது வாலிபர், கரிகாலன் தெருவை சேர்ந்த 18 வயது இளைஞர், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட குமிழி மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் 49 வயது ஆண், கண்டிகை பகுதியை சேர்ந்த 34 வயது வாலிபர், ரத்தினமங்கலம் பகுதியை சேர்ந்த 35 வயது வாலிபர் உள்பட செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 299 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 626 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 30 ஆயிரத்து 714 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 530 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 382 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் அவருடன் பணியாற்றி வந்த 7 பேர் என மொத்தம் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 265 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 31 ஆயிரத்து 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 28 ஆயிரத்து 872 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 1,660 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 533 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 2 பேர் இறந்துள்ளார்.

படப்பை

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 47, 27, 20 வயதுடைய ஆண்கள், எழிச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 75 வயதுடைய முதியவர் வரதராஜபுரம் ஊராட்சி பகுதியை சேர்ந்த 49 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைத்தொடர்ந்து அவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 196 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்களுடன் மாவட்டம் முழுவதும் 21 ஆயிரத்து 204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 19 ஆயிரத்து 612 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். ஆயிரத்து 288 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் இதுவரை 304 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் நேற்று ஒருவர் இறந்துள்ளார்.

Next Story