புதுவையில் கொரோனா பாதிப்பு 31 ஆயிரத்தை தாண்டியது


புதுவையில் கொரோனா பாதிப்பு 31 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 10 Oct 2020 10:45 PM GMT (Updated: 10 Oct 2020 10:01 PM GMT)

புதுவையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டியது.

புதுச்சேரி, 

புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 829 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 337 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 411 பேர் குணமடைந்துள்ளனர். ஒரே ஒருவர் மட்டும் மரணம் அடைந்துள்ளார்.

புதுவை மாநிலத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 30 ஆயிரத்து 24 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 147 பேருக்கு தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டது. 31 ஆயிரத்து 233 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4 ஆயிரத்து 719 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

அதாவது 1,736 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 2 ஆயிரத்து 983 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 25 ஆயிரத்து 955 பேர் குணமடைந்துள்ளனர்.

559 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 464 பேர் புதுச்சேரி பகுதியை சேர்ந்தவர்கள். 49 பேர் காரைக்காலையும், 42 பேர் ஏனாமினையும், 4 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள் ஆவர். புதுவையில் உயிரிழப்பு என்பது 1.79 சதவீதமாகவும், குணமடைவது 83.10 சதவீதமாகவும் உள்ளது.

Next Story