நெல்லை, தூத்துக்குடியில் 95 பேருக்கு கொரோனா- தென்காசியில் மூதாட்டி சாவு


நெல்லை, தூத்துக்குடியில் 95 பேருக்கு கொரோனா- தென்காசியில் மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 17 Oct 2020 10:00 PM GMT (Updated: 18 Oct 2020 12:03 AM GMT)

நெல்லை, தூத்துக்குடியில் நேற்று 95 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தென்காசியில் மூதாட்டி இறந்துள்ளார்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் நேற்று 47 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாநகர பகுதியில் 22 பேர், நாங்குநேரி பகுதியில் 3 பேர், அம்பை பகுதியில் 3 பேர், மானூர் பகுதியில் 3 பேர், பாளையங்கோட்டை புறநகர் பகுதியில் 3 பேர், பாப்பாக்குடி பகுதியில் 3 பேர், ராதாபுரம் பகுதியில் 3பேர், வள்ளியூர் பகுதியில் 2 பேர், களக்காடு பகுதியில் 3 பேர், சேரன்மாதேவி பகுதியில் 2 பேர் அடங்குவர். நேற்று ஒரே நாளில் 70 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 839-ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 13 ஆயிரத்து 50 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 584 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 205 பேர் இறந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் நேற்று 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு மூதாட்டி இறந்துள்ளார். இந்த மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்து 716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 7 ஆயிரத்து 409பேர் வீடு திரும்பி உள்ளனர். 156 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 151 பேர் இறந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 48 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 430 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 13 ஆயிரத்து 777 பேர் முழுமையாக குணமடைந்து உள்ளனர். மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 527 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 126 பேர் இறந்து உள்ளனர்.


Next Story