தர்மபுரி மாவட்டத்தில் அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் - அமைச்சர் கே.பி.அன்பழகன் இனிப்பு வழங்கினார்


தர்மபுரி மாவட்டத்தில் அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் - அமைச்சர் கே.பி.அன்பழகன் இனிப்பு வழங்கினார்
x
தினத்தந்தி 18 Oct 2020 5:48 AM GMT (Updated: 18 Oct 2020 5:48 AM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. தர்மபுரியில் நடந்த விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. தர்மபுரியில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமை தாங்கினார். கோவிந்தசாமி எம்.எல்.ஏ., கட்சியின் விவசாய பிரிவு மாநில தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்றார். விழாவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. சிங்காரம், ஒன்றியக்குழு தலைவர் நீலாபுரம் செல்வம், முன்னாள் மாவட்ட செயலாளர் பூக்கடை முனுசாமி, சார்பு அணி மாவட்ட நிர்வாகிகள் பழனிசாமி, சின்அருள்சாமி, சுமதி, தகடூர் விஜயன், கோவிந்தசாமி, மோகன், கூட்டுறவு சங்க தலைவர்கள் அங்குராஜ், சுப்பிரமணியம், மாதேஷ், நிர்வாகிகள் வடிவேல், செந்தில்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நத்தஅள்ளியில் நடந்த விழாவுக்கு ஒன்றிய செயலாளர் பெரியண்ணன் தலைமை தாங்கி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணை தலைவர் ராஜேஸ்வரி பெரியண்ணன், ஒன்றிய துணை செயலாளர் வேடி, ஒன்றிய பொருளாளர் சின்னப்பையன், மாவட்ட பிரதிநிதி விஜயன், ஒன்றிய இணை செயலாளர் மாரியம்மாள் கலைவாணன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று பாலக்கோடு ஒன்றிய, நகர அ.தி.மு.க. சார்பில் பாலக்கோடு பஸ் நிலையத்தின் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு நகர செயலாளர் சங்கர், மாவட்ட அவை தலைவர் நாகராசன், ஒன்றிய செயலாளர்கள் கோபால், செந்தில், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அதனை தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அக்ரோ தலைவர் சாம்ராஜ், கோவிந்தசாமி, கிரிநாத், முருகேசன், ராஜா, நாகன், முத்துஜா, சுப்ரமணி, வீரமணி, சரவணன், சண்முகம், தருமன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காரிமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் காரிமங்கலம் மொரப்பூர் சாலை மற்றும் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணி துணைத்தலைவர் குமார், நகர செயலாளர் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சாந்தி சம்பத், கவிதா நாகராஜன், ராதிகா காசிராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் மாது, கணபதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று பாப்பாரப்பட்டியில் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் 49-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலாளர் வேலுமணி தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாபு முன்னிலை வகித்தார். மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன் கட்சி கொடி ஏற்றி வைத்து எம்.ஜி.ஆர். சிலை, ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவில் முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜி, முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் மாதேஷ், மாவட்ட கவுன்சிலர் குட்டி, நகர பொருளாளர் சுகுமார், நகர துணை செயலாளர் கருணாநிதி, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் முனுசாமி, சக்திவேல், மார்க்கபந்து உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கடத்தூரில் நகர அ.தி.மு.க. சார்பில் நடந்த விழாவில் கோவிந்தசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் மதிவாணன், முருகன், நகர செயலாளர் சந்தோஷ், முன்னாள் நகர செயலாளர் சசிக்குமார் மற்றும் நிர்வாகிகள் கந்தசாமி, கண்ணன், ரவீந்திரன், அசோக், மாதையன், ஆதிமூலம், சென்னகிருஷ்ணன், செல்வராஜ், வெங்கடாச்சலம், சபியுல்லா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

Next Story