கோவில்பட்டியில் 2 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு


கோவில்பட்டியில் 2 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 18 Oct 2020 4:45 PM GMT (Updated: 18 Oct 2020 4:45 PM GMT)

கோவில்பட்டியில் 2 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் சுப்புராஜ் மகன் வெங்கடேஷ் (வயது 24). இவர் சுபா நகரில் கோழிக்கடை நடத்தி வருகிறார். இந்திரா நகரைச் சேர்ந்த ராஜாமணி மகன் வைர பிரகாஷ் (24). இவர் அப்பகுதியில் உள்ள கோழி கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இவர்கள் 2 பேரும் நேற்று மாலையில் இளையரசனேந்தல் சாலையில் வந்தனர். அப்போது அங்கு வந்த கடலை மிட்டாய் கடை தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் சுபா நகரைச் சேர்ந்த மோகன் மகன் விக்னேஷ் (30) என்பவர் அவர்களை வழிமறித்து பேசினார்.

இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த விக்னேஷ், அரிவாளால் வைர பிரகாஷ், வெங்கடேஷ் ஆகியோரை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவர்கள் 2 பேரும் காயமடைந்தனர்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பத்மாவதி, சப்-இன்ஸ்பெக்டர் குருச்சந்திர வடிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு வெங்கடேசுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி விக்னேஷை தேடி வருகின்றனர்.

Next Story