9 சட்டமன்ற தொகுதிகளில் 25 வாக்குச்சாவடி மையங்கள் இடமாற்றம் கலெக்டர் தகவல்


9 சட்டமன்ற தொகுதிகளில் 25 வாக்குச்சாவடி மையங்கள் இடமாற்றம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 21 Oct 2020 3:16 PM GMT (Updated: 21 Oct 2020 3:16 PM GMT)

மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 25 வாக்குச்சாவடி மையங் கள் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளதாக கலெக்டர் சந்திர சேகர் சாகமூரி தெரிவித்துள்ளார்.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதி களில் வாக்குச்சாவடி மையங் களை பகுப்பாய்வு செய்து, இறுதி பட்டியல் வெளியிடுதல் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்திர சேகர் சாகமூரி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணை யத்தின் அறிவுரைபடி 1.1.2021-யை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணி 10.8.2020 முதல் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 18-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையிலான காலங்களில் வாக்காளர் பதிவு அலுவலர் தங்களது அதிகார வரம்பிற்குட் பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்து 2021-ம் ஆண்டிற்கான வாக்குச் சாவடிகளை முறைப்படுத் தினர். அதன்படி கட லூர் மாவட்டத்தில் உள்ள திட்டக் குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டு மன்னார்கோவில் ஆகிய 9 சட்டமன்ற தொகுதி களிலும் 2,298 வாக்குச்சாவடி மையங்கள் இருந்தன.

அதைத்தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அறிவுரை களின்படி வாக்குச் சாவடியை பிரிப்பதற்கு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. அதாவது, நகர மற்றும் கிராமப் புற பகுதிகளில் 1500 வாக் காளர்களுக்கு மேல் உள்ள பாகங்களை பிரித்தல், முன்னரே அமைந்துள்ள வாக்குச்சாவடிகள் தேவை யின் அடிப்படையில் இட மாற்றம், கட்டிட மாற்றம் செய்ய வேண்டிய நிலை இருப்பின் அதற்கேற்றவாறு உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. மேலும் வாக்காளர்கள் 2 கிலோ மீட்டருக்கும் மேல் பயணம் செய்து வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பின் புதிய வாக்குச் சாவடிகளை ஏற் படுத்துதல், 1500-க்கும் குறைவாக இருந்தாலும் புதிய பகுதியினை உருவாக்கி நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

அரசியல் கட்சியினர், பொதுமக்கள், குடியிருப்போர் நல சங்கம், பொதுநல அமைப்புகள் வாக்குச்சாவடி அமைவிடங்கள் குறித்த கருத்துக்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் களால் கூட்டம் நடத்தப்பட்டு முன் மொழிவுகள் பெறப் பட்டுள்ளது. இதன் அடிப் படையில் வாக்குச் சாவடி மையங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. பகுப் பாய்வுக்கு முன்பு 2298 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது 5 வாக்குச்சாவடிகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. 2 பிரிவு மாற்றம், 25 வாக்குச்சாவடிகள் இட மாற்றம், 32 வாக்குச்சாவடிகள் கட்டிட மாற்றம், 1 வாக்குச் சாவடி பெயர் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது 2295 வாக்குச்சாவடியாக குறைந் துள்ளது. இவ்வாறு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரி வித்தார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அருண் சத்தியா, துணை கலெக்டர் (பயிற்சி) ஜெயராஜ் பவுலின், மாவட்ட கலெக்டரின் நேர் முக உதவியாளர் (பொது) பரிமளம், தேர்தல் தாசில்தார் பாலமுருகன், அ.தி.மு.க. நகர செயலாளர் குமரன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், நாராயணசாமி, காங்கிரஸ் ஊடக பிரிவு ரவிக்குமார், பகுஜன் சமாஜ் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் சுரேஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி குளோப், சுந்தர்ராஜா உள்பட அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story