20 சதவீத போனஸ் வழங்கக்கோரி போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பினர் முற்றுகை போராட்டம்


20 சதவீத போனஸ் வழங்கக்கோரி போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பினர் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 10 Nov 2020 5:30 AM GMT (Updated: 10 Nov 2020 5:24 AM GMT)

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கக்கோரி போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்,

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். 14- வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்கி தீர்வுகாண வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் திருப்பூர் சி.டி.சி. பணிமனை முன்பு நேற்று காலை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு எல்.பி.எப். மண்டல தலைவர் சென்னியப்பன் தலைமை தாங்கினார்.

ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் சண்முகம், சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் செல்லத்துரை, டி.டி.எஸ்.எப். சார்பில் துளசிமணி, ஏ.ஏ.எல்.எல்.எப். சார்பில் மாரியப்பன், ஐ.என்.டி.யு.சி. சார்பில் ஜஹாங்கீர், எம்.எல்.எப் சார்பில் பாலசுப்பிரமணியம், எல்.பி.எப். சார்பில் துரைசாமி மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டம் நேற்று மாலை வரை நடைபெற்றது. பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story