நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மேலும் 40 பேருக்கு கொரோனா


நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மேலும் 40 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 21 Nov 2020 10:00 PM GMT (Updated: 21 Nov 2020 5:09 PM GMT)

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மேலும் 40 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் நேற்று 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் நெல்லை மாநகர பகுதியை சேர்ந்தவர்கள் 5 பேர். மேலும் மானூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 684 ஆக உயர்ந்தது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தென்காசி, வாசுதேவநல்லூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,972 ஆக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 542 ஆக உயர்ந்துள்ளது. இதில் 15 ஆயிரத்து 279 பேர் முழுமையாக குணமடைந்தனர். தற்போது அரசு ஆஸ்பத்திரிகள், வீடுகளில் 128 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 135 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்துள்ளனர்.

Next Story