செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 108 பேர் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 108 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 22 Nov 2020 10:00 PM GMT (Updated: 22 Nov 2020 10:23 PM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 108 பேர் பாதிக்கப்பட்டனர்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 108 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46 ஆயிரத்து 834 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 45 ஆயிரத்து 256 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 705 பேர் உயிரிழந்துள்ளனர். 873 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 92 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 40 ஆயிரத்து 358 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 39 ஆயிரத்து 84 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். ஆயிரத்து 627 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 2 பேர் இறந்துள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் இதுவரையில் 647 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 82 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 285 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 26 ஆயிரத்து 411 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 417 பேர் உயிரிழந்துள்ளனர். 457 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story