பள்ளிக்கரணையில் 4 நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீர்: வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்து விடுவதால் மாடி வீடுகளில் மக்கள் தஞ்சம் + "||" + Rainwater stagnates for 4 days in Pallikuranai: Snakes infest houses
பள்ளிக்கரணையில் 4 நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீர்: வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்து விடுவதால் மாடி வீடுகளில் மக்கள் தஞ்சம்
பள்ளிக்கரணையில் கடந்த 4 நாட்களாக வீடுகளை மழைநீர் சூழ்ந்து நிற்பதால் பாம்புகள், விஷப்பூச்சுகள் வீடுகளுக்குள் படையெடுப்பதால் அச்சம் அடைந்த பொதுமக்கள், குழந்தைகளுடன் மாடி வீடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
வீடுகளை சூழ்ந்த மழைநீர்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்தது. இதனால் புறநகரில் உள்ள பல ஏரிகள் நிரம்பின. பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது.
பள்ளிக்கரணை சாய் பாலாஜி நகர் பகுதியில் உள்ள ஆயிரம் வீடுகளை சுற்றிலும் கடந்த 4 நாட்களாக மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
பாம்புகள் படையெடுப்பு
தேங்கி நிற்கும் மழைநீரில் ஆகாய தாமரைகளும் படர்ந்து உள்ளதால் பாம்புகள், விஷப்பூச்சிகள் படையெடுத்து வருவதாகவும், இரவு நேரங்களில் அவை வீடுகளுக்குள் புகுந்து விடுவதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால் கீழ் தளத்தில் வசிக்கும் பொதுமக்கள் பயந்துபோய், தங்கள் குழந்தைகளுடன் இரவு நேரங்களில் மாடி வீடுகளில் தஞ்சமடைந்து உள்ளனர்.
பள்ளிக்கரணையின் பிற பகுதிகளில் இருந்து வரக்கூடிய தண்ணீர் தங்கள் பகுதியில் தேங்கி நிற்கிறது. மழைநீர் வடிகால்வாய் பணி பாதியில் உள்ளது. எனவே தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
வீட்டிற்குள் மழைநீர் புகுந்து வசிக்க முடியாத நிலையில் யாரும் தங்களை கண்டுகொள்ளாததால் தீக்குளிக்க பெட்ரோல் கேனுடன் வந்த 3 பேரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
ஆண்டிமடம் விளந்தை பகுதியில் தெருக்கள், சாலையில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதை தவிர்க்க அப்பகுதியில் வடிகால் வாய்க்கால் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தியம்பேட்டை கிராமத்தில் இரண்டு வார காலமாக குடியிருப்பை சூழ்ந்திருக்கும் மழைநீரை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுப்பார்களா? என அந்த பகுதி மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.